Wednesday, March 21, 2012

நான் படித்த புத்தகங்கள்

எழுத்தாளர் பற்றிய குறிப்பு:


 சேத்தன் பகத் 

                 சேத்தன் பகத் புது தில்லியில் பிறந்தவர், அவர் புது தில்லியின் தவுலா கான் இராணுவப் பொதுப் பள்ளியில் படித்தார். தன்னுடைய எந்திரப் பொறியியல் படிப்பை, இந்திய தொழில்நுட்ப கல்விநிறுவனத்திலும்  (IIT)  அதன் பின்னர் மேலாண்மை கல்வியை  இந்திய மேலாண்மைக் கல்விநிறுவனம், அகமதாபாத்தில் படித்தவர. பின்  ஹாங்காங்கில் டியூட்சே வங்கியில் பதினோரு ஆண்டுகள் பணிபுரிந்தார், 2008 ஆம் ஆண்டில் மும்பைக்கு வந்துவிட்டார். பின்னர் அவர் தன்னுடைய வேலையை விட்டு விலகி தன் எழுத்துப் பணியை தொடங்கினார்,  இதுவரை 5 நாவல்களை எழுதி உள்ளார், ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் இளைய தலைமுறையிடையே பிரபலமானவராகவும், அதிக அளவில் வாங்கப்படும் புத்தக எழுத்தாளராகவும் உள்ளார். 




                   இவர் ஒன் நைட் அட் கால் சென்டர், டூ ஸ்டேட்ஸ் , த்ரீ மிஸ்டேக்ஸ் ஆப் மை லைப் , ஃபைவ் பாய்ண்ட் சம்ஒன், ரிவல்யுஷன் 2020 என்ற ஐந்து புதினங்களை எழுதி உள்ளார். இந்த புத்தகங்கள் திரைப்படங்களாகவும் எடுக்கப் பட்டு பெருவெற்றிப் பெற்றுள்ளன.  மிகப் பெரிய இந்தி செய்தித்தாளான தைனிக் பாஸ்கர் மற்றும் ஆங்கில தினசரியான தி இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றில் தலையங்கத்துக்கு எதிர்ப்புறத்தில் ஒரு பத்தி பகத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. "புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களின் முக்கிய நோக்கம் பொழுதுபோக்குவதற்கு ஆனால் நான் எழுதும் பத்திகள் தேசம் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பது பற்றிய என் கருத்தை வெளிப்படுத்த அனுமதிக்கின்றன" என்று அவர் கூறுகிறார். ஊக்கப்படுத்தும் பேச்சுகளை வழங்குவதற்காக இந்தியாவெங்கும் இருக்கும் கல்வி நிலையங்களுக்கும் அவர் சென்று வருகிறார். 

     சேத்தன் பகத்தின் தளத்தை படிக்க சொடுக்கவும்:http://www.chetanbhagat.com/about/



             இந்தியர்களின் புனித தலைநகரான வாரணாசியில் கங்கை நதி கரை தான் கதைக்களம். ஒரு அழகான முக்கோண காதல் கதை, கோபால், ஆர்த்தி, ராகவ் மூவர்கிடையிலான காதல், மோதல், ஆசை, நிராசைகள் தான் கதை. வாரணாசி கரையில் கங்கையின் ஓட்டத்தினூடே கதையும் நகர்கிறது, 
 வாரணாசி


பாத்திரப்படைப்பிலும், கதைக்கள விவரனையிலும் ஆசிரியரின் உழைப்பு புத்தகத்தை கீழே வைக்காமல் படித்து முடிக்க வைக்கிறது. 
           
                      ஒரு காதல் கதையின் ஊடே இந்திய சமூகத்தின் பிரச்சனைகளையும், அதிகார மட்டத்தில் நடக்கும் ஊழல்களையும், மாற்றத்தை விரும்பும் இளைஞகர்கள் என இன்றைய இந்தியாவின் சூழலை பிரதிபலிக்கிறது.  IIT , NIT , நுழைவு தேர்வுகள் பற்றிய காட்சிகள் மாற்றத்தை குறித்து நம்மையும் சிந்திக்க வைக்கிறது. 

No comments:

Post a Comment