Wednesday, March 21, 2012

கருவாச்சி காவியம் - கவிபேரரசு வைரமுத்து

எழுத்தாளர் பற்றிய குறிப்பு:
 வைரமுத்து 
             வைரமுத்து  புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார்.நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்
           அவரின் ரசிகர்களால் நடத்தப்படும் இணையத்தை பார்க்க சொடுக்கவும்.http://www.vairamuthu.net/vairamuthu/index.php/vairamuthu-mugappu.html


    "புனையப்படாத நாவல்தான் வாழ்க்கை,புனையப்பட்ட வாழ்க்கை தான் நாவல்,கெட்டியான இரத்தமும், பெண் வேர்வையும், பிசுபிசுக்கும் வாழ்க்கை இது" நூலின் முகத்தில் ஆசிரியன் சொன்ன வரிகள் இது . 






              தமிழகத்தின் தெற்குப் பகுதியில் வாழும் கடைகோடி சனங்களின் வாழ்க்கை ,கலாச்சார, பண்பாட்டு ஆவணம் இது. தமிழகத்தின் கலாச்சாரமாய் வெளியுலகுக்கு இதுவரை சொல்லப்பட்டு வந்தவை, மேல்தட்டு மக்களின் அதிலும் குறிப்பாய் பார்ப்பன ஸாதியரி௯ந் பழக்க வழக்கங்கள் தான். தமிழக நடன வடிவமாய் பரதம் முன்னிலைப்படுத்தப்படும் வேளையில் கூத்து, தேவராட்டம், கோடாங்கி ஆட்டம், கரகாட்டம், பறையாட்டம், பொய்க்கால் குதிரை, காவடி, மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற தமிழ் நடன வடிவங்கள் புறக்கணிக்கப் பட்ட நிலையில் இருப்பது போல் தான் தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களின் கலாச்சாரமும் பண்பாட்டுக் கூறுகளும் பொது வெளியில் புறக்கணிக்கப்பட்டு கொண்டு இருக்கும் சூழலில் இது போன்ற ஆவணப்படுத்துதல் மிக முக்கியமானது. 
 கருவாச்சி ம.செ. வின் ஓவியம் 
              


                     எந்தவொரு இனக்குழுவிலும் காணப்படும் புவியியல் ரீதியான கலாச்சார, பண்பாட்டு, மொழி சார்ந்த வேறுபாடுகளை அழித்தொழித்து ஒருமைபடுத்துவதையே அனைத்து அரசுகளும், அதிகார விரும்புகின்றன.அந்த வகையில் இந்த புத்தகம் தென் தமிழகத்தின் 
 விவசாய கிராமமான சொக்கத்தேவன் பட்டியை ஆவணப்படுத்துகிறார்,  அந்த செம்புழுதியில்  பிறந்து இன்று சென்னையில் வாழும் கவிஞர். 




                   சொக்கத்தேவன்பட்டி, கள்ளிக்காட்டில் வாழ்ந்த கருவாச்சியின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் அழகாய் படம் பிடித்து காட்டுகிறார். விவசாயத்தை மட்டும் நம்பி வாழும் மக்களின் நிலையற்ற சூழலையும் அதிலும் தளராத நம்பிக்கையின் கீற்றுகளையும் காட்சிப்படுத்துகிறார். 


            பெண்ணை காவிய தலைவியாக்கி காவியம் படைப்பது தமிழுக்கு புதிதல்ல, ஆனால் காலத்து மேட்டிலும், கள்ளிக் காட்டிலும், கல்லை கரைத்து கஞ்சி குடிக்கும் அடித்தட்டு கருவாச்சியை காவிய தலைவியாக்கி இருப்பது தான் புதுமை. அவள் கரங்கள் மென் கரங்கள் அல்ல, மண்வெட்டி பிடித்து காப்பேறிய கரங்கள், அவள் வேன்மேகத்தை நிகர்த்த நிறத்தவள் இல்லை. வெம்மையில் உழைத்து மை கரி என கருப்பேரிய நிறத்தவள், இதுவரை தமிழ் இலக்கியங்கள் பாடாத புதுமை பெண் இவள். 




                           கருவாச்சியின் பாத்திர படைப்பு இன்றைய பெண்ணியம் பேசுபவர்களுக்கு பிற்போக்காய் தெரியலாம். அது அந்த காலக்கட்டத்தில் (சுதந்திரத்திற்கு முன்) வாழ்ந்த பெண்ணின் பாத்திரப் பிரதிபலிப்பு என்பதை மறந்து விடக் கூடாது.  
ம. செ வின் ஓவியம் 



     புத்தகத்தை படிக்க சொடுக்கவும் :http://www.scribd.com/doc/1026956/-

No comments:

Post a Comment